| பெயர் | |
|---|---|
| புராண பெயர்(கள்): | வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலி வேலி, சாலிநகர், சாலிவாடி, பிரமவிருந்தபுரம், தாருகாவனம்[1] |
| பெயர்: | திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் |
| அமைவிடம் | |
| ஊர்: | திருநெல்வேலி |
| மாவட்டம்: | திருநெல்வேலி |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர்,வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர், வேணுவன மகாலிங்கேஸ்வரர், வேணுவனேஸ்வரர்) |
| தாயார்: | காந்திமதியம்மை, வடிவுடையம்மை |
| தல விருட்சம்: | மூங்கில் |
| தீர்த்தம்: | பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாரித் தீர்த்தம், சிந்துபூந்துறை |
| ஆகமம்: | காரண ஆகமம், காமீக ஆகமம் |
| சிறப்பு திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம். |
| பாடல் | |
| பாடல் வகை: | தேவாரம் |
| பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
| வரலாறு | |
| தொன்மை: | புராதனக் கோயில் |
| நிறுவிய நாள்: | 2000 ஆண்டுகளுக்கு முன்னர் |
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் - தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் "திருநெல்வேலிப் பதிகம்" பாடியிருப்பதால் அதற்கு முன்பே "திருநெல்வேலி" என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன.
ConversionConversion EmoticonEmoticon